யாழ்.குடாக்கடலில் இரு மீனவர்கள் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாக்கடலில் இரு மீனவர்கள் கைது!

யாழ்.குடாக் கடலில், சட்டவிரோதமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தமை மற்றும் கடல் அட்டைகள் பிடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குருநகர் மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

நீரியல் வள திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு