கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! -அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம்-

ஆசிரியர் - Editor II
கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! -அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம்-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதான இலங்கை பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அந்நாட்டின் மெல்பேர்னில் வசிக்கும் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயான மெலோனி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு கணவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மகள் அயல் வீட்டாருக்குத் தெரிவித்த கண்காணிப்பு கமெராக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவரின் மகள் தங்களிடம் வந்து, 'என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்' என்று கூறியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 44 வயதான மெலோனி பெரேரா என்ற பெண் அவரது கணவர் தினுஷ் குரேரா (வயது 45) என்பவரால் கொல்லப்பட்டுள்ளார். இரவு வேளையில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊடகச் செய்திகளின்படி, தம்பதியரின் மகனும் கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயங்களுடன் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தம்பதியினர் அண்மையில் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், உயிரிழந்த பெண் அண்மையில் வீட்டின் சாவியை மாற்றியுள்ளார் என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் தப்பியோட முயற்சித்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு