மனிதனால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்!! -வூஹான் ஆய்வகத்திலிருந்தே கசிந்தது அமெரிக்காவே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆய்வக விஞ்ஞானி-

ஆசிரியர் - Editor II
மனிதனால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்!! -வூஹான் ஆய்வகத்திலிருந்தே கசிந்தது அமெரிக்காவே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆய்வக விஞ்ஞானி-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு டிசெம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் உலக நாடுகளுக்கு பரவியதுடன், பல இலட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவிய விதம் குறித்து சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் திடுக்குடும் தகவல்லை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான 'வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்' பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார். அவர் எழுதிய 'வூஹான் பற்றிய உண்மை' என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. 

அதில் அவர் கூறியுள்ளதாவது:- வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சிச் சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்கு நடத்தப்பட்டன. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம்.

இத்தகைய ஆபத்தான 'உயிரி தொழில்நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம். உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம் (பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். 

கொரோனா வைரஸ் மனிதனால் 'மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது' என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விடயமே. இவ்வாறு விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு