யாழ்.தாவடியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்வெட்டு மோதல்! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்வெட்டு மோதல்! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.தாவடி மதுபான நிலையத்தின் அருகில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வாள்கெட்டுக்கு இலக்காகி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர்.

இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு