யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில் உயிர்பிழைத்தார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok வீடியோ எடுப்பதற்கு வித்தை காட்டியவர் மோட்டார் சைக்கிளுடன் கடலில் பாய்ந்து மயிரிழையில் உயிர்பிழைத்தார்..

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து TikTok வீடியோ எடுத்த  இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடலுக்குள் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்  இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இளைஞருடன் சேர்ந்து கடலுக்குள் பாய்ந்தது.  சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நின்றவர்களால் இளைஞர் காப்பற்றப்பட்டதுடன்  கடலுக்குள் விழுந்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு