யாழ்.அரியாலையில் பேருந்து மீது புகைரதம் மோதி கோர விபத்து! பேருந்து சாரதி பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் பேருந்து மீது புகைரதம் மோதி கோர விபத்து! பேருந்து சாரதி பலி..

யாழ்.அரியாலை பகுதியில் புகைரத பாதைக்குள் நுழைந்த பேருந்து மீது புகைரதம் மோதியதில் பேருந்து சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு