ஓரினச்சேர்கையாளர்கள் திருமணம் செய்யலாம்!! -அமெரிக்காவில் உருவானது புதிய சட்டம்-

ஆசிரியர் - Editor II
ஓரினச்சேர்கையாளர்கள் திருமணம் செய்யலாம்!! -அமெரிக்காவில் உருவானது புதிய சட்டம்-

அமெரிக்க நாட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வங்கும் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் 2015 ஆம் ஆண்டு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. 

இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் பிரேரனை அந்நாட்டு பாராளுமன்றத்தின் செனட்சபையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இப் பிரேரனை வாக்கெடுப்பிற்காக விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த பிரேரனை வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு