தன்னுடைய வீட்டிலிருந்து ஹெரோயின் போதைப் பொருளை பைக்கட்டில் அடைத்துக் கொண்டிருந்தவர் கைது! யாழ்.புன்னாலைக்கட்டுவனின் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தன்னுடைய வீட்டிலிருந்து ஹெரோயின் போதைப் பொருளை பைக்கட்டில் அடைத்துக் கொண்டிருந்தவர் கைது! யாழ்.புன்னாலைக்கட்டுவனின் சம்பவம்..

வீட்டில் வைத்து போதைப் பொருளை பையில் அடைத்துக் கொண்டிருந்த 24 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இளைஞன் தனது வீட்டில் போதைப் பொருளை பொதி செய்துகொண்டிருப்பதாக பொலிஸாருக்க இரகசிய தகவல் கசிந்துள்ளது. 

இதனடிப்படையில் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இளைஞனை கையும் களவுமாக கைது செய்திருக்கின்றனர். 

மேலும் வீட்டிலிருந்து பொதி செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள், 1.56 மில்லி கிராம் போதைப் பொருள் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டுள்ளனர். 

சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு