பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் விடுதலை...

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் விடுதலை...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வழக்குதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் ந.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

இதன்போது குறித்த இருவரும் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்வதாக மன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர், 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு