யாழ்.சங்கானையில் பொதுமக்கள் இன்று வீதி மறியல் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் பொதுமக்கள் இன்று வீதி மறியல் போராட்டம்!

யாழ்.சங்கானையில் இரு வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறுகோரி இன்று காலை பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தை நடாத்தியிருக்கின்றனர். 

காரைநகருக்கு செல்லும் குறித்த இரண்டு பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இதனால் போக்குவரத்துகள் முடங்கின. இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

போராட்டத்தின் முடிவில் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு