இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு! வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவைகள் இன்று முடங்கும்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு! வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவைகள் இன்று முடங்கும்..

இ.போ.சபையின் வடபிராந்தியத்தில் உள்ள 7 சாலைகளினது பணியாளர்களும் இன்று செவ்வாய் கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். என இ.போ.ச தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

யாழ்.சாலையில் இ.போ.ச ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பணிப்புறக்கணிப்பிற்கு தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த போராட்டம் வடபிராந்திய ரீதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 

"எமக்கு பாதுகாப்பு வேண்டும்", "நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்", "தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக" 

உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு