யாழ்.மானிப்பாய் - ஆலடி சந்திப் பகுதில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது இராணுவம்/ பொலிஸ்/ அதிரடிப்படை கூட்டாக கொலைவெறித் தாக்குதல், மக்கள் கூடியதால் பதற்றம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் - ஆலடி சந்திப் பகுதில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது இராணுவம்/ பொலிஸ்/ அதிரடிப்படை கூட்டாக கொலைவெறித் தாக்குதல், மக்கள் கூடியதால் பதற்றம்...

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீதியால் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி இரு இளைஞர்கள் மீது இராணுவம், அதிரடிப்படை, பொலிஸார் இணைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், காயமடைந்த இளைஞர்களை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்றிரவு மானிப்பாய் ஆலடி சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்துள்ளனர். இதன்போது வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார். 

அவர்களை வழிமறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை, " தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது" என கூறியுள்ளார். பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அதன்போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினாவி முரண்பட்ட போது , பொலிஸாருக்கும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர். 

அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு