யாழ்.நகரில் சாரதிப் பயிற்சி பெறவந்திருந்த பெண்ணின் கைப்பை, தொலைபேசி திருட்டு! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சாரதிப் பயிற்சி பெறவந்திருந்த பெண்ணின் கைப்பை, தொலைபேசி திருட்டு! இருவர் கைது..

சாரதிப் பயிற்சி பெறுவதற்கு வந்திருந்த பெண் ஒருவருடைய கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.நகரில் சாரதிப் பயிற்சி பெறுவதற்காக வந்திருந்த பெண் ஒருவருடைய கைப்பையை திருடியதுடன் 65 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. 

இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்றய தினம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். 

கைதான இருவரில் ஒருவர் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் அவருக்கு எதிராக நீதிமன்றில் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு