யாழ்.நகரில் நிறைபோதையில் வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பி ஓட முயற்சித்த இரு பொலிஸார் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் நிறைபோதையில் வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பி ஓட முயற்சித்த இரு பொலிஸார் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

யாழ்.நகரில் நிறைபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நிலையில் பரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் யாழ்.முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு 

யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மற்றவர் ஐயன் குளம் பொலிஸ் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள். 

என தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு