யாழ்ப்பாணம் - மஹவை புகைரத சேவை 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - மஹவை புகைரத சேவை 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் - மஹவை இடையிலான புகைரத சேவைகள் எதிர்வரும் 2023 தை மாதம் 15ம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு இடம்பெறாது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன,  

உங்கள் கோரிக்கை தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம். மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகள் ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும்.

இந்தக் கால பகுதியில் குறித்த பாதை முழுமையாக சீரமைக்கப்படும். இதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு