சமூகவலைத்தள காதலரை சந்திக்க 5 ஆயிரம் கி.மீ பயணம் செய்த பெண்ணுக்கு கொடூர சம்பவம்!!

ஆசிரியர் - Editor II
சமூகவலைத்தள காதலரை சந்திக்க 5 ஆயிரம் கி.மீ பயணம் செய்த பெண்ணுக்கு கொடூர சம்பவம்!!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சமூவலைத்தளத்தின் ஊடாக அறிமுகமான காதலரை 5 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்து சந்திக்க சென்ற போதும் அவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

மெக்சிகோவில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் (வயது 51) என்ற பெண், சமூகவலைத்தளம் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆணை தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொடர்பு நாளடைவில் காதலானது.

இதனை தொடர்ந்து தனது காதலரை சந்திக்க பிளாங்கா ஒலிவியா முடிவு செய்துள்ளார். ஆனால், அதன் பின்னரே அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. காதலரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, 5 ஆயிரம் கி.மீ தூரம் கடந்து பயணம் செய்துள்ளார்.

ஆனால், அவர் சென்று சேர்ந்தது உறுப்புகளை திருடும் நபர் என பின்னரே தெரிய வந்துள்ளது. அதற்குள் அவரது உயிர் பறிபோய் விட்டது. உண்மையில் ஜூவான் தனது காதலியின் உறுப்புகளை பிரித்து எடுத்து விற்பனை செய்துள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு