யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை/ விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலில் பல பிரதேச செயலர்களை காணவில்லை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை/ விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலில் பல பிரதேச செயலர்களை காணவில்லை...

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான உயர்மட்டக் கலந்துரையாடலில் பெரும்பாலான பிரதேச செயலாளர்களை காண முடியவில்லை. 

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாலை 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் ஐந்துக்கும் குறைவான பிரதேச செயலாளர்களே பங்கு பெற்றிருந்தனர். 

எனினும் எஞ்சிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு