யாழ்.பருத்தித்துறையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலியும், பெற்றோர் கௌரவிப்பும்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலியும், பெற்றோர் கௌரவிப்பும்!

யாழ்.பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

3 மாவீரர்களை மண் விடுதலை போராட்டத்திற்கு அர்ப்பணித்த தாய் ஒருவர் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கண்ணீர்மல்க, உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு