விபச்சாரத்தில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது!

ஆசிரியர் - Editor I
விபச்சாரத்தில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது!

வவுனியா நகர்ப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வடமாகாணத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த ஓர் குற்றச்சாட்டில் 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு