படகு மூலம் கனடா செல்ல முயற்சித்து வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ்.சாவகச்சோியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்!

ஆசிரியர் - Editor I
படகு மூலம் கனடா செல்ல முயற்சித்து வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ்.சாவகச்சோியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்!

கப்பல் மூலம் கனடாவுக்கு செல்ல முயற்சித்து வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த யாழ்.சாவகச்சோியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்திற்கு துாதுவராலயம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக 

புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர 

வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு