மருதங்கேணி பிரதேச செயலாிடம் விளக்கம்கோாி கடிதம் அனுப்பியுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சு..

ஆசிரியர் - Editor I
மருதங்கேணி பிரதேச செயலாிடம் விளக்கம்கோாி கடிதம் அனுப்பியுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சு..

யாழ்ப்பாண மாவட்டம் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் இனத்துவேசமாக நடந்துகொள்வதாக கூறி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விளக்கம்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் வேறுமாவட்ட மீனவர்கள் தொழில் புரியும் இடத்திற்கான அனுமதி பிரதேச செயலாளரினால் வழங்கப்படவில்லை . 

என்பதனை பகிரங்கமாக தெரிவித்த நிலையில் உள்ளார் மீனவர்கள் கோரியது போன்று கடலட்டை பிடிப்பவர்கள் சட்டவிதிமுறை மீறிய விடயங்களை சுட்டிக்காட்டியதால் எதிர்கொண்ட நெருக்கடிகளினால்  கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முறையிட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த பிரதேச செயலாளரிடம் எழுத்தில் விளக்கம் கோரியுள்ளது. அதாவது தெற்கில் இருந்து வந்தவர்களிற்கு சட்டத்திற்கு முரணாகச் செய்யும் தொழிலிற்கு உதவி புரியவில்லை என்பதன். அடிப்படையில் இக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு