யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து டிப்பருடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 10 பேருக்கும் மேல் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து டிப்பருடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 10 பேருக்கும் மேல் படுகாயம்..

பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேருக்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில் 6பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4பேர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு