யாழ்.வல்லை பாலத்தில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 இளைஞன் நீரில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளான்.!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை பாலத்தில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 இளைஞன் நீரில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளான்.!

யாழ்.வல்லை பாலத்தில் துாண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வல்லை பாலத்தடியில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு இளைஞர் தவறி விழவே ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞரே தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

தப்பி சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு