நிறைபோதையில் நின்று வீதியால் சென்ற பெண்களின் கையை பிடித்து இழுத்த 20 வயது ஆசாமி! பொலிஸார் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
நிறைபோதையில் நின்று வீதியால் சென்ற பெண்களின் கையை பிடித்து இழுத்த 20 வயது ஆசாமி! பொலிஸார் தேடுதல்..

நிறைபோதையில் பெண்களின் கையை பிடித்து இழுத்து அட்டகாசம் புரிந்த ஆசாமி தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.நகரில் உள்ள புத்தகசாலை ஒன்றில் வேலை செய்யும் அராலி பகுதியை சேர்ந்த பெண்கள் இருவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன்போது அராலி மேற்கு பகுதியை சேர்ந்த 20 வயதான நபர் நிறைபோதையில் குறித்த பெண்களின் கைகளை பிடித்து இழுத்து அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய நபரின் வீடு மற்றும் உறவினர்களின் வீட்டை முற்றுகையிட்டு தேடியுள்ளனர். 

எனினும் அவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவருமாறு உறவினர்களை பொலிஸார் எச்சரித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு