யாழ்.ஆனைக்கோட்டை, சுதுமலை பகுதிகளில் இரு வீடுகளில் திருடர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டை, சுதுமலை பகுதிகளில் இரு வீடுகளில் திருடர்கள் கைவரிசை!

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர் ஒன்று திருட்டு போயுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வந்து ஒருவர் குறித்த வீட்டிற்குள் நுழைந்து சிலிண்டரை திருடிச்ச சென்றது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு