மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான யாழ்.இந்துக்கல்லுாரி ஆசிரியர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

ஆசிரியர் - Editor I
மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான யாழ்.இந்துக்கல்லுாரி ஆசிரியர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

யாழ்.இந்த கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதித்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10 சேர்ந்த மாணவனை தரம் 11 வகுப்புக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் 

பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த ஆசிரியரை பொலிஸார் முற்படுத்திய நிலையில் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு