யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கைது!

யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு நேற்றைய தினம் சென்ற பொலிஸார் அங்கு கசிப்பு விற்பனை இடம்பெறுவதை கண்டறிந்த நிலையில், 

கசிப்புடன் குறித்த பெண்ணைக் கைது செய்தனர். 10 போத்தல் கசிப்பும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பெண் கட்டைக்காடு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும், 

கடந்த காலங்களிலும் பொலிஸார் இவரைப் பலமுறை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்த போதும், கசிப்பு விற்பனையைக் கைவிடவில்லை. 

என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தமது கிராமத்தில் இடம் பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுத்து.

அதனால் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரை கேட்டு கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு