யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்..

யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு