யாழ்.அச்செழு பகுதியில் 29 வயதான இளைஞன் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்செழு பகுதியில் 29 வயதான இளைஞன் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது..!

யாழ்.அச்செழு பகுதியில் 29 வயதான இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 7 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் நீண்டநாள் கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு