யாழ்.கற்கோவளத்தில் சகோதரி வீட்டிற்கு வந்திருந்த 15 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த சோகம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கற்கோவளத்தில் சகோதரி வீட்டிற்கு வந்திருந்த 15 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த சோகம்!

யாழ்.வடமராட்சி - கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் விளையாடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

நண்பர்களால் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அச் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேத்தனர். எனினும் சிறுமி முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 

இதன்போது அலன்மேரி ஆனந்தராஜா என்னும் 15 வயதுடைய எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். 

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு