யாழ்.இளவாலை - உயரப்புலம் பகுதியில் 3 வீடுகளில் சுமார் 16 லட்சம் பெறுமதியான நகைகள், பொருட்கள் கொள்ளை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்...

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலை - உயரப்புலம் பகுதியில் 3 வீடுகளில் சுமார் 16 லட்சம் பெறுமதியான நகைகள், பொருட்கள் கொள்ளை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்...

யாழ்.இளவாலை - உயரப்புலம் பகுதியில் 3 வீடுகளில் சுமார் 16 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். குறித்த சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு