யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி சோதனை! பல வர்த்தகர்கள் சிக்கினர், பெருமளவு இறைச்சி, உணவுப் பொருட்கள் அழிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி சோதனை! பல வர்த்தகர்கள் சிக்கினர், பெருமளவு இறைச்சி, உணவுப் பொருட்கள் அழிப்பு..

யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை நடவடிக்கையினை இன்று முன்னெடுத்துள்ளதுடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பண்டங்கள், இறைச்சி வகைகள் அழுக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்தனர்.

குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. 

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.

அத்துடன் உணவகம், ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கைப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு