பிரித்தானிய வீரர்களை கொல்ல சதித் திட்டமிட்ட ஈரான்!! -கட்டாரில் பலத்த பாதுகாப்பு-

ஆசிரியர் - Editor II
பிரித்தானிய வீரர்களை கொல்ல சதித் திட்டமிட்ட ஈரான்!! -கட்டாரில் பலத்த பாதுகாப்பு-

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் கட்டாரில் ஆரம்பமாகியுள்ள நிலையில், பிரித்தானிய வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டார் அரசாங்கம் பலம் வாய்ந்த 14 பேர்கள் கொண்ட குழு பிரித்தானிய அணியின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் நிறுத்திவைத்துள்ளது. 

பிரித்தானிய கால்பந்து அணிக்கான முதல் போட்டி நடைபெறும் நாளில் 10 பிரித்தானியர்களை கொல்லவோ, கடத்தவோ ஈரானிலிருந்து மர்ம நபர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரித்தானிய அணி தமது முதல் போட்டியில் ஈரானை எதிர்கொள்ளும் நிலையில் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் சுமார் 10,000 பிரித்தானிய இரசிகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரித்தானிய அணி தங்கியிருக்கும் ஹொட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 30 அடி இடைவெளியில் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, ஒட்டக வீரர்களும் பிரித்தானிய அணியின் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல், பிரித்தானியர்களை கொல்ல திட்டமிடும் ஈரானையும் போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு