நண்பனின் பிறந்தநாளை கொண்டாட நீர் இறைக்கும் மோட்டாரை திருடி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார நண்பர்கள் 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
நண்பனின் பிறந்தநாளை கொண்டாட நீர் இறைக்கும் மோட்டாரை திருடி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார நண்பர்கள் 3 பேர் கைது!

நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நீர் இறைக்கும் மோட்டாரை திருடி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த 3 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அருகில் வீதியில் வழக்கமாக நிற்கும் இளைஞர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர்களை பொலிஸார் விசாரித்தபோது சம்பவம் அம்பலமானதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு