யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் உள்ள இரு சடலங்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் உள்ள இரு சடலங்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

அடையாளம் காணப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இளவாலை - திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலமும் அடையாளம் காணப்படவில்லை. 

குறித்த இரு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு