A- 9 வீதி - கனகராயன்குளம் பகுதியில் ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 21 வயதான இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
A- 9 வீதி - கனகராயன்குளம் பகுதியில் ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 21 வயதான இளைஞன் பலி..

A- 9 வீதி கனகராயன்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான். 

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A- 9 வீதியின் 222 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் நகரில் உள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வருகின்ற 

21 வயதுடைய சாள்ஸ் வினேத் என்ற ஊழியர் பணிமுடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு