போலி வீசாவை பயன்படுத்தி லண்டன் செல்ல முயற்சி! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
போலி வீசாவை பயன்படுத்தி லண்டன் செல்ல முயற்சி! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது..

போலி வீசாவை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக லண்டன் செல்வதற்கு முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய பயணிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் 

தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்கு வந்திருந்தனர். கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, விசாக்கள் போலியானது என கண்டறிந்தனர். 

இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு