யாழ்.செம்மணி குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்..

யாழ்.செம்மணி பகுதில் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 வயதான இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

செம்மணி இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று மாலை தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியும் இருக்கின்றார். இதன்போது நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். 

நேற்று நள்ளிரவுவரை இளைஞரைக் காணவில்லை. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு