திருட்டுச் சம்பவம் இடம்பெற்று பல மணிநேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு செல்லாத பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
திருட்டுச் சம்பவம் இடம்பெற்று பல மணிநேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு செல்லாத பொலிஸார்!

திருட்டுச் சம்பவம் இடம்பெற்று பல மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை எதனையும் மேற்கொள்ளவில்லை. என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னலை பிரித்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், 

வீட்டிலிருந்த 7 லட்சம் பெறுமதியான நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது. 

கொள்ளை இடம்பெற்ற வீட்டில் வயோதிப தம்பதியினரே வாழ்ந்துவரும் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை உறக்கத்திலிருந்து எழுந்த பின்பே கொள்ளை இடம்பெற்றது தொியவந்துள்ளது. 

பின்னர் காலை 9 மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். 

எனினும் நேற்றுமுன்தினம் இரவு வரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகள் எதனையும் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு