யாழ்.பருத்தித்துறை நகரில் 2வது தடவையாக நேற்றிரவும் சுற்றிவளைப்பு! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகரில் 2வது தடவையாக நேற்றிரவும் சுற்றிவளைப்பு! இருவர் கைது..

யாழ்.பருத்தித்துறை நகரில் நேற்றைய தினம் மாலையும் மின்வெட்டு அமுலானதை தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடுதலில் இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 

நகரில் தொடர்ச்சியாக பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ளும் சம்பவங்கள் மற்றும் பொது இடங்களில் முகம் சுழிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறையிடப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பருத்தித்துறை நகரில் 14 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மின்வெட்டு அமுலான பின்னர் பொலிஸார் திடீர் சோதனை நடத்தியிருந்தனர். 

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு