தென்னை ஓலையை வெட்டிய குடும்பஸ்த்தர் மின்சாரம் தாக்கி பலி!

ஆசிரியர் - Editor I
தென்னை ஓலையை வெட்டிய குடும்பஸ்த்தர் மின்சாரம் தாக்கி பலி!

கிளிநொச்சி - கோணாவில் காந்தி கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் இராசேந்திரனம் இரவச்சந்திரன் (வயது 46) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

தனது வீட்டில் உள்ள தென்னை மரம் அருகில், மின்சார கம்பிகள் செல்வதனால், மின்சார கம்பிகளுக்கு இடையூறாக இருந்த தென்னை ஓலையை வெட்ட முற்பட்ட வேளையில், 

மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்ட பொதுமக்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலம், 

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு