யாழ்.துன்னாலையில் கோவிலை உடைத்துக் கொள்ளை! 22 வயதான சந்தேகநபரை கொள்ளையடித்த பொருட்களுடன் மடக்கிய பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.துன்னாலையில் கோவிலை உடைத்துக் கொள்ளை! 22 வயதான சந்தேகநபரை கொள்ளையடித்த பொருட்களுடன் மடக்கிய பொலிஸ்..

யாழ்.துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் கோவிலில் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட பல லட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற 

இரகசிய தகவல் ஒன்று அமைய துன்னாலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு