வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலர் போராட்டம்! இணைய வழியில் நடந்த கூட்டம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலர் போராட்டம்! இணைய வழியில் நடந்த கூட்டம்..

வடமாகாண ஆளுநர் செயலக வாசலில் அரசியல் கட்சிகளை சேர்ந்த சிறு குழுவினர் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். 

தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போத காணிகளை அபகரிக்காதே, எமது காணிகள் எமக்கு வேண்டும் என கோஷங்களையம் எழுப்பியிருந்தனர். 

இந்நிலையில் ஆளுநர் செயலகத்தில் இன்று பிரதேச செயலர்கள் மற்றும் காணி திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இணையவழி கூட்டமாக மாறியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு