யாழ்.கச்சோி - நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சோி - நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..

யாழ்.கச்சோி வீதியில் இருந்த சுமார் 200 வருடங்கள் பழமையான மலைவேம்பு மரம் சீரற்ற காலநிலையினால் அடியோடு சாய்ந்துள்ளது. 

நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால் அருகில் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கும் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. 

இதன் காரணமாக யாழ்.மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு 

விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரத்தினை 

சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் இந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்துள்ளது இரவு 11 மணியளவில் இடம்பெற்றமையினால் 

உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இது பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம் பெற்று இருந்தால் 

உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும் எனவே இந்த மரம் விழுந்தமைக்கு அரசஅதிகாரிகளை பொறுப்பு கூற வேண்டும். 

த்தோடு எனது வீட்டின் மதிலில் இந்த மரம் விழுந்துள்ளதால் இந்த வீட்டு உரிமையாளருக்குரிய நஷ்டஈட்டினை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும். 

எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு