யாழ்.கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து கொள்ளை! கொள்ளையனை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து கொள்ளை! கொள்ளையனை மடக்கியது பொலிஸ்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்த நிலையில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உரும்பிராய் பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் இருந்து இரண்டரை பவுண் தங்க சங்கிலி, 

20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு