SuperTopAds

கேப்பாபிலவு மக்கள் 40 போ் தமது காணிகளை தமக்கு வழங்க இணங்கியதாக இராணுவம் பொய் கூறி மக்களின் காணிகளை அபகாிக்க நினைக்கின்றனா், கேப்பாபிலவு மக்கள் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவு மக்கள் 40 போ் தமது காணிகளை தமக்கு வழங்க இணங்கியதாக இராணுவம் பொய் கூறி மக்களின் காணிகளை அபகாிக்க நினைக்கின்றனா், கேப்பாபிலவு மக்கள் சீற்றம்..

கேப்பாபிலவு கிராமத்தில் படையினாின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை படையினருக்கே கொடுத்து அதற்கான இழப்பீட்டை பெறுவதற்கு 40 காணி உாிமையாளா்கள் விருப்பம் தொிவித்துள்ளதாக இராணுவம் கூறியிருந்த தகவல்கள் பிழையானவையும், பொய்யானவையும் என கேப்பாபிலவு மக்கள் கூறியுள்ளாா். 

குறித்த விடயம் தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் ,

கேப்பாபுலவு நிலத்தில் நந்திக் கடலோரம் உள்ள நிலத்தின் உருமையாளர்கள் நிலத்திற்கான பணத்தினை வழங்கினால் படையினருக்கு நிலத்தை வழங்க இணக்கம் தெரிவிப்பதாக 40 நில உரிமையாளர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றை படைத்தரப்பு 

மீள் குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் செந்தில்நந்தனனிடம் வழங்கியதாக நாம் அறிந்தோம். அதன் பிரகாரம் அண்மையில் முல்லைத்தீவிற்கு வருகை தந்த அமைச்சர் சுவாமிநாதனிடம் எமது நிலம் தொடர்பில் கேட்டபோது அந்த நிலத்தை படையினருக்கு வழங்க இணங்குவதாக எழுத்தில் 

வழங்கிவிட்டு என்னிடம் நிலத்தை கேட்டால் எவ்வாறு வழங்குவது . எனத் தெரிவித்தார். குறித்த பதிலைக்கேட்ட நாம் அதிர்ச்சியடைந்து எமது நிலத்தை வழங்குவதாக நாம் சம்மதம் தெரிவிக்கவில்லை. என்பதனை அமைச்சரிடம் தெரிவித்தோம். 

அதனால் உடனடியாக பிரதேச செயலாளர் தலமையில் கூடி தனித்தனியே அவர்களின் விருப்பத்தினை அறிந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதன்போது அந்த நிலத்தின் 37 உாிமையாளா்கள் பங்கு கொண்டிருந்தோம். உண்மையில் படையினருக்கு ஒப்பமிட்டு வழங்கியதாக கூறுப்படும் 40பேரில் இருவர் அயல்நாட்டில் வாழ்கின்றனர்.

அவ்வாறு அயல்நாட்டில் வாழும் உரிமையாளர் ஒப்பம் உட்படவே 40 உரிமையாளரின் ஒப்பத்தை படையினர் ஒப்படைத்திருந்த நிலையில் கூட்டத்தில் பங்குகொண்ட 37 பேரில் 30 பேர் தமது நிலத்தை படையினருக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை.எனப் பிரதேச செயலாளருக்கு எழுத்தில். 

தெரிவித்தனர். எனவே இதன் மூலம் எமது நிலத்தை படையினர் கபடமாக அபகரிக்க முயல்வதோடு அதற்கு எம்மில் சில புள்ளுரிவிகளும் துணைபோவதும் வெளிப்பட்டுள்ளது. என்றனர்.

இதேவேளை குறித்த 59 ஏக்கர் நிலமும் 55பேருக்குச் சொந்தமானது. இந்த 55 பேரிலேயே 37பேர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டோம். என்றார்.