புகைரதம் மோதியதில் 25 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
புகைரதம் மோதியதில் 25 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

புகைரதத்தில் மோதி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சித்தாண்டி - முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான்.

ந்தச் சம்பவம் சித்தாண்டி - முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி - 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு