பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் வீடொன்று முற்றுகை! 5 இளைஞர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் வீடொன்று முற்றுகை! 5 இளைஞர்கள் கைது..

பளை பகுதியில் உள்ள வீடொனறில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர். 

குறித்த வீட்டில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அந்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர். 

இதன்போது கொழும்பு, தர்மபுரம் மற்றும் பளை பகுதிகளை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 600 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு