கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்துக் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

ஆசிரியர் - Editor I
கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்துக் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருள்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக 

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கண்காணித்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு 

பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் போதைக்கு அடிமையாகியுள்ள 23 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் 

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு