பளை - முகாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
பளை - முகாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு! ஒருவர் கைது..

பளை - முகாவில் பகுதியில் வீடொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளதுடன் அவற்றை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். 

பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீடு முற்றுகையிடப்பட்டு வாள், கட்டுத்துவக்கு ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

கைதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு